எடப்பாடி அருகே சித்திரப்பாளையம் அரசு பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்விச் சுற்றுலாவில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, பூங்கா, காமலாபுரம் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு உற்சாகமடைந்தனர்.

சேலம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியத்தில் சித்திரப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், இந்த கிராமத்திற்கு பேருந்து வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும்பாலும் கிராமத்தை விட்டு வெளியூர்களுக்கு செல்ல முடியாது. அதேபோல், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை கல்வி சுற்றுலா அழைத்து செல்ல பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வி மேலாண்மைக்குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, சேலம் ஏற்காட்டில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு சென்ற மாணவ, மாணவிகள் அங்குள்ள வனவிலங்குகளை கண்டு ரசித்தனர். முதலை, குள்ளநரி, புள்ளிமான், மலைப்பாம்பு உள்ளிட்ட விலங்குகளை நேரில் பார்த்து வியப்படைந்தனர். மேலும், பூங்காவில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் விமானங்களை மிக அருகில் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.எடப்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா!. குரும்பப்பட்டி பூங்கா, விமான நிலையம் ஆகிய இடங்களை பார்வையிட்டு உற்சாகம்!.

Readmore: பூலாம்பட்டி சக்தி காளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!. ஆட்டை கடித்து நேர்த்திக்கடன்!. பக்தர்கள் பரவசம்!