பெங்களூரில் இருந்து மதுரைக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த சேலம் போலீசார், கார் ஓட்டுநரான ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் இருந்து காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக சேலம் மாவட்ட எஸ்.பி., கௌதம் கோய்லுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் ஓமலூர் அடுத்த காமலாபுரம் பிரிவு சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து அந்த வழியாக கார் ஒன்று வந்துள்ளது. அதனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை நடத்தியதில் 357 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேஜாராம் (32) என்பது தெரிய வந்தது. மேலும் குட்காவை பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்த முயன்றதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, கார் ஓட்டுநர் தேஜாராமை கைது செய்த போலீசார், மதுரைக்கு கடத்தி செல்ல வைக்கப்பட்டிருந்த ரூ.2,50,000 மதிப்புள்ள 357 கிலோ குட்கா போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து மேலும் அப்பகுதியில் வாகன சோதனையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Readmore: கட்சி கொடி இருந்தா மட்டும் சும்மா விட்ருவோமா?. விஜய்யின் தவெக கொடியுடன் தாறுமாறாக ஓடிய கார்!. போதையில் இருந்த இளைஞர்களுக்கு தர்மஅடி!