தேவூர் அருகே காவேரிப்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திமுகவினர் மற்றும் 100 வேலைத்திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய நிதியை கடந்த சில மாதங்களாக மத்திய அரசு விடுவிக்காமல் இருந்து வருகிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், சேலம் மாவட்டம் தேவூர் அருகே காவேரிப்பட்டியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் டி.எம்.செல்வகணபதி அறிவுறுத்தலின்படி, சங்ககிரி ஒன்றியம் காவேரிப்பட்டியில் சங்ககிரி ஒன்றிய திமுக செயலாளர் ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பாதைகைகள் ஏந்தியவாறு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More : ஊராட்சிக் கோட்டை நீர் மின்தேக்க கதவணையில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றம்..!! பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்..!!