கோவையில் தொழிலதிபர்களின் மனைவிகளை குறிவைத்து பழகிவிட்டு உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்த இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொழிலதிபர் ஒருவர் சென்னை மதுரவாயில் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி, குழந்தைகள் கோவையில் வசித்துவரும் நிலையில் வாரம் ஒருமுறை குடும்பத்தை பார்க்க கோவை செல்வதை தொழிலதிபர் வழக்கமாக இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் தொழிலதிபருக்கு போன் ஆப் மூலம் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், குடும்பத்தினரை பார்க்கவந்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து, அந்த நம்பர் குறித்து விசாரித்ததில் கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஸ்வீட்சன் என்ற இளைஞர் நாராயணன் என்ற பெயரில் நம்பர் வாங்கி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேலும் வீட்டிற்கு சென்ற போலீசாரை பார்த்து ஸ்வீட்சன் தப்பியோடினார்.

அவரது மனைவி, குடும்பத்தாரிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சரவணம்பட்டியிலுள்ள தனியார் கல்லூரியில் இசை பிரிவில் உதவியாளராக வேலை பார்த்துவந்த ஸ்வீட்சன், ஏற்கனவே சிங்காநல்லூரிலுள்ள ஒரு கம்பெனியில் பணிபுரியும்போது சென்னை தொழிலதிபரின் மனைவியும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மகளுடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கத்தை பயன்படுத்தி ஸ்வீட்சன் தொழிலதிபர் மனைவியுடன் நெருக்கமாக போட்டோக்களை எடுத்து வைத்து பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷியத்தை அறிந்த தொழிலதிபர் மனைவியின் தந்தை, ஸ்வீட்சனை மிரட்டியுள்ளார். சில நாட்கள் அமைதி காத்த இளைஞர், மீண்டும் தனது காதல் லீலையை விரித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், தொழிலதிபர்களின் மனைவிகளை மட்டும் குறிவைத்து பணம் பறித்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.

இதில் அந்த இளைஞரின் மனைவி மற்றும் குடும்பத்தினரே அவருக்கு உடந்தையாக இருந்ததுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, உல்லாச வாழ்க்கை வாழ பல பெண்களிடம் பேசுவதற்கு பல உதவிகளை, ஸ்வீட்சன் மனைவி செய்திருக்கிறார். மேலும் தப்பியோடிய அந்த இளைஞர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Readmore: “எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா”..? பணக்காரனாக ஜோசியர் சொன்ன ஐடியா..!! ஓனருக்கு தெரியாமல் ஓட்டுநர் செய்த தில்லாலங்கடி வேலை..!!