12ஆம் வகுப்பு மாணவனுடன் 9ஆம் வகுப்பு மாணவி ஓடிப்போன சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அருமனை கிராமத்தில் இரண்டாவது கணவருடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், முதல் கணவருக்கும் இவருக்கும் 14 வயதில் மகள் உள்ளார். அவர், தனது தாயுடன் வசித்து வரும் நிலையில், 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவி தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த போது, தாயின் செல்போனில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். தாயாருக்கு தனது மகள் ரீல்ஸ் பார்ப்பதாக தோன்றினாலும், அவர் 17 வயது பிளஸ் டூ மாணவருடன் சாட்டிங் செய்து கொண்டிருந்துள்ளார்.

பின்னர், இந்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்த பிறகு, தாயார் அவரை கண்டித்துள்ளனர். அதன்பின், மாணவி ஒருநாள் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய தாயார் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த ஏமாற்றத்தில், அவர் அறுமலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதைப் பற்றி விசாரணை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், மாணவனும் திடீரென காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவனும் மாணவியை காதலித்து வந்த நிலையில், இருவரும் வெளியூர் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : BREAKING | இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்..!! நடப்பு ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் நிறுத்தம்..!!