மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார்.

மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா நேற்று ஆய்வு செய்தார். அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு உள்ளிட்ட பகுதிகளையும், அணையில் தற்போது நடந்து வரும் பராமரிப்புப் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் முன்பாக நேரடியாக பார்வையிட்டு அணையின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திட்டமிட்டடி, ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. முதலமைச்சர் முக.ஸ்டாலின், காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்க உள்ளதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.

தற்போது, மேட்டூர் அணையில் ரூ.20 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. 6 மாதங்கள் மட்டுமே பணிகள் செய்ய முடியும். தற்போது, இரண்டு மாதங்களுக்கு முன்பாக மேட்டூர் அணை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்பிற்கு முன்பாக பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு பணிகள் நிறுத்தி வைக்கப்படும். பின்னர், பாசன காலம் முடித்த பிறகு மீண்டும் பணிகள் துவக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Read More : பூமணியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா..!! அலகு குத்தியும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!!