மாணவியை பார்க்க வந்த வாலிபர் மீது சிறுவன் அரிவாளால் மூன்று இடங்களில் வெட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி என்ற ஊரைச் சேர்ந்தவர் பூபாலன். இவருக்கு வயது 25. இவர் 16 வயதுடைய பிளஸ் 1 படிக்கும் மாணவியை காதலித்து வந்தார். நேற்று காலை 11 மணியளவில், அந்தச் சிறுமியை பார்க்க பூபாலன், அவளது வீட்டிற்கு அருகே வந்தார். அப்போது, அந்த மாணவியின் தந்தையும், மாணவியின் சித்தப்பாவின் மகனும் (வயது 17) பூபாலனை பார்த்து சத்தம் போட்டனர்.

இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் கோபமடைந்த 17 வயது சிறுவன், அருகில் இருந்த அரிவாளை எடுத்து, பூபாலனின் தலையில் மூன்று இடங்களில் வெட்டியுள்ளார். இதில், பூபாலன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் பூபாலனை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more முகத்தில் இந்த இடத்தில் பருக்கள் தோன்றினால் மூளையை சேதப்படுத்தும்!. எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?