எடப்பாடி அருகே பெண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, திம்பத்தியான் வளவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (32). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் குண்டுமல்லி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் தற்போது மீண்டும் பெண் குழந்தை பிறந்ததையடுத்து, குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து, குழந்தை இல்லாத தம்பதியான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவருக்கு புரோக்கர் மூலம் தலா 1 லட்சத்துக்கு குழந்தையை விற்க முயன்றுள்ளார். ஆனால், தடுத்தெடுக்கப்பட்ட குழந்தையை சட்டப்பூர்வமாக பதிவு செய்துகொள்ளும் வகையில் சேலம் குழந்தைகள் நல ஆணையத்தை தொடர்பு தகவல் அளித்துள்ளார் அந்த நபர்.

இதையடுத்து, சேட்டுவிடம் விசாரணை மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. திருமணம் ஆகி 7 ஆண்டுகளில் இருவருக்கும் தற்போதுவரை 6 குழந்தைகள் பிறந்துள்ளனர். ஏற்கனவே, பிறந்த 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையை தலா ரூ. 1 லட்சத்துக்கு புரோக்கர்கள் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்தது அம்பலமானது. இதையடுத்து, சேட்டுவை கைது செய்த போலீசார், இதற்கு பின்னணியால் இன்னும் யார் யார் இருக்கிறார்கள், குழந்தையை விற்க உதவிய புரோக்கர்கள் குறித்தும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: ’எனக்கு அது உடனே வேணும்’..!! போலீசிடம் சென்ற ஜெயம் ரவி..!! இப்போ என்ன பஞ்சாயத்து..?