மின் சிக்கனத்தை வலியுறுத்தும் விதமாக மின்சாரத்துறை சார்பில் எடப்பாடியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த ஊர்வலத்தை எடப்பாடி கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மின்வாரிய ஊழியர்கள், மின் சிக்கனத்தின் அவசியம் குறித்தும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, ஊர்வலமாக வந்தனர்.
மேலும், அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளாண்டி வலசு மின்வாரிய அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இதில் மின்வாரியத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.