காவலரின் Gpay பண பரிவர்த்தனை மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன் (36). இவர், தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பாண்டிசெல்வி, கடந்த சில தினங்களுக்கு முன் பைக் விபத்தில் உயிரிழந்த நிலையில், அந்த சோகத்தில் மலையரசன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், விடுமுறையில் இருந்த மலையரசன், திடீரென காணாமல்போனதால், அவரது உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் எரியக்கரை அருகே கலையரசனின் உடலானது கடந்த 19ஆம் தேதி எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், சந்தேகத்தின் பேரின் மதுரையைச் சேர்ந்த சேர்ந்த மூவேந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுனரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, மூவேந்திரனை கைது செய்ய தனிப்படையினர் சென்றபோது புதருக்குள் பதுங்கி இருந்த அவர், காவலர்களை ஆயுதங்களால் தாக்க முயன்றுள்ளார். அப்போது சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணனின் கையில் ஆயுதங்களால் வெட்டிவிட்டு மூவேந்திரன் தப்பியுள்ளார். இதில், சார்பு ஆய்வாளர் படுகாயமடைந்த நிலையில், பாதுகாப்பு கருதி தப்பியோடிய மூவேந்தரை போலீசார், முழங்காலில் சுட்டுப்பிடித்து கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மூவேந்திரனும், அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த சார்பு ஆய்வாளரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கூறுகையில், ”தனிப்படை காவலர் மலையரசனின் மனைவி விபத்தில் சிக்கியிருந்தபோது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக மலையரசன் அவ்வப்போது வந்து சென்றுள்ளோம். அப்போது, ஆட்டோ ஓட்டுனரான மூவேந்திரனுக்கும் மலையரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவசர தேவைக்கு எனக்கூறி டீசல் செலவு, மது குடிக்க என சிறிதளவு பணத்தை Gpay மூலமாக ஆட்டோ ஓட்டுனர் வாங்கி வந்துள்ளார். இதற்கிடையே, காவலர் மலையரசனின் G-PAY பாஸ்வேர்டுகளை தெரிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர், சம்பவ நாளான 18ஆம் தேதி, மலையரசனை ஆட்டோவில் மது குடிப்பதற்காக மூவேந்திரனும் அவரது நண்பர் ஒருவருடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், ஏர்போர்ட் ரிங்ரோடு பகுதியில் புதர் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதையடுத்து, காவலர் மலையரசனின் செல்போனை ஓட்டுனர் மூவேந்திரன் எடுத்துள்ளார். இதனை காவலர் பார்த்ததால், அவரை கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்து உயிரிழந்த மலையரசனை, அந்த பகுதியிலேயே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பின்னர், அவரது உடலை ஈச்சனேரி பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர், காவலர் செல்போனில் இருந்து G-PAY மூலமாக ரூ.80,000 பணத்தை, தனது அக்கவுண்ட்டுக்கு மாற்றிவிட்டு, செல்போனை சாலையோரம் தூக்கிவீசி சென்றுள்ளதாக” போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரின் செல்போன் அழைப்பு, காவலரின் G-pay பண பரிவர்த்தனை மற்றும் சிசிடிவி காட்சிகள் என துல்லியமாக விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

Read More : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துனர் காலியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!