அரசிராமணி பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டி, செட்டிபட்டி, தேவூர், காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரேஷன் கடைகளில் இருப்பு வைத்துள்ள அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு ஆகியவை சரியான அளவில் உள்ளதா என்றும், பொருட்கள் சரியான முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா..? என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், அரசிராமணி செட்டிபட்டி ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பதிவு செய்யும் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என கூறியதை அடுத்து அந்த இயந்திரத்தை பொறியாளரிடம் ஒப்படைத்து, உடனடியாக சரி செய்யுமாறு கடை விற்பனையாளருக்கு உத்தரவிட்டார்.