அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டது. அது என்னவென்றால், இனி அமேசான் நிறுவனம் தங்கள் App மூலம் எடுக்கப்படும் ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.5 மார்க்கெட் பிளேஸ் கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அமேசானில் பிரைம் வைத்திருப்பவர்களுக்கும் இந்த ரூ.5 மார்க்கெட் பிளேஸ் கட்டணம் பொருந்தும் என அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் பிளாட்பார்ம் கட்டணத்தை வசூல் செய்கின்றது. இதனால், தங்களுடைய செயல்பாட்டு செலவினங்களுக்கு இந்த கட்டணம் வசூல் செய்வது மிகவும் முக்கியமான ஒன்று என கூறுகின்றன. எனவே, இந்த நிலையில், அமேசான் நிறுவனமும் இதை பின்பற்றி ரூ.5 மார்க்கெட் பிளேஸ் கட்டணம் அனைத்து ஆர்டர்களுக்கும் வசூல் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, அமேசானில் நாம் எவ்வளவு ஆர்டர் செய்தாலும் கட்டாயம் இறுதியில் ரூ.5 மார்க்கெட் பிளேஸ் கட்டணமாக சேர்த்து மொத்தம் செலுத்த வேண்டிய தொகை காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மார்க்கெட் பிளேஸ் கட்டணம் என்பது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் மூலம் இந்த நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Read more “பெரும் சோகம்..!! திடீரென கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து..!! வயல்வெளியில் பாய்ந்த அதிர்ச்சி..!! பெண் பலி..!! நடந்தது என்ன..??.”