சேலம் சின்னப்பம்பட்டியில் உள்ள கசப்பேரி 50 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியதால் மக்கள் கிடா வெட்டியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்தவகையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது. இருப்பினும், அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில சில நாட்களாக சரபங்கா நதியில் நீர் அதிகளவில் செல்கிறது. மேலும் இதிலிருந்து உபர்நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இளம்பிள்ளை அருகே சின்னப்பம்பட்டியில் அமைந்துள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கசப்பேரிக்கு சரபங்காநதியில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டு வந்தது. இதனால், 50ஆண்டுகளுக்கு பின் கசப்பேரி முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து, கிடா வெட்டி, சர்க்கரை பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Readmore: சோதனைச் சாவடியில் அடிதடி; மேட்டூரில் 3 காவலர்கள் சஸ்பெண்ட்!. வழக்குப் பதிவுசெய்து விசாரணை!