சைத்ரா என்ற பெண், தனது கணவர், குழந்தைகள், மாமனார் மற்றும் மாமியாரைக் கொல்ல முயற்சித்தச் சம்பவம் ஒன்று கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், பெலூர் தாலுகாவில் உள்ள கேரளூர் கிராமத்தில் வசித்து வருகிறார் சைத்ரா என்ற பெண். இவருக்கு வயது 33. பத்து வருடங்களுக்கு முன்பு கஜேந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சைத்ரா, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷிவு என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இந்த உறவு அவரது கணவர் கஜேந்திராவுக்குத் தெரியவந்தது. இதனால், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. எனவே, குடும்பத்தினர் இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களைத் தனது வழிக்கு குறுக்கீடாகக் கருதிய சைத்ரா, அவர்களை மெதுவாக விஷம் வைத்துக் கொல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், கஜேந்திரா திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, மருத்துவர்கள் அவரது உணவில் விஷம் கலந்திருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால், தனது மனைவி மீது சந்தேகம் கொண்ட கஜேந்திரா, சைத்ரா வைத்திருந்த சில மாத்திரைகளைக் கண்டுபிடித்து மருத்துவரிடம் காண்பித்துள்ளார். அவை விஷ மாத்திரைகள் என்பதை மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார். உடனடியாக கஜேந்திரா போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், சைத்ரா தினமும் சமைக்கும் உணவில் விஷத்தைக் கலந்து கணவர், குழந்தைகள், மாமனார் மற்றும் மாமியாருக்குக் கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. அனைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவார்கள் என்று சைத்ரா திட்டமிட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், விஷயத்தைப் புரிந்துகொண்ட கஜேந்திரா, உடனடியாக அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து, பெலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, பெலூர் போலீசார் சைத்ராவை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, விஷம் கொடுத்தது மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சைத்ராவின் கள்ளக்காதலன் ஷிவு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் கேரளூர் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more பஸ்ஸில் கிடைத்த 6 பவுன் நகை..!! நேர்மையாய் ஒப்படைத்த பெண்மணி..!! குவியும் பாராட்டுக்கள்..!! எடப்பாடியில் நெகிழ்ச்சி..!!