திருமண வீட்டுக்குச் சென்ற சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பெர்காம்பூரைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சகோதரிகள், தங்கள் தாயாருடன் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர். அங்கு, 14 வயதுச் சிறுமிக்குத் தெரிந்த ஒரு இளைஞர், அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு, அந்த இளைஞன் தனது மூன்று நண்பர்களை வரவழைத்து, அந்தச் சிறுமியை அவர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்திருக்கிறான்.

இதற்கிடையே, தனது சகோதரியைக் காணாத 13 வயதுச் சிறுமி, அவளைத் தேடி வந்தபோது, அந்த நான்கு இளைஞர்களும் அச்சிறுமியையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பயந்துபோன சகோதரிகள் இருவரும் அன்று உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளனர். மறுநாள், அந்த நான்கு பேரும் சிறுமிகளை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று, 2-வது நாளாக இருவரையும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவர்களில் ஒருவன் சிறுமிகளை அவர்களது சொந்த ஊரில் கொண்டுபோய் விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.

இந்நிலையில், சிறுமிகளின் தாயார் எங்கு சென்றீர்கள் என்று கேட்டபோதுதான், நடந்த கொடூரமான சம்பவத்தைப் பற்றி அவருக்குத் தெரியவந்துள்ளது. உடனடியாக, சிறுமிகளின் பெற்றோர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! கிராம உதவியாளர் பணி..!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!