இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப்பகுதியில் தனியாக சென்ற பெண்ணை மதுபோதையில் 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு வன்கொடுமை செய்த சம்பவம் ராமநாதபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த 40 வயது பெண் புத்தேந்தல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு டிச.29 இரவு ஆட்டோவில் சென்று திரும்பியுள்ளார். அப்போது, ரயில்வே கேட் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றதாகவும், அங்கு மது அருந்திக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த புவனேஷ்குமார் 24, முருகன் 25, செல்வக்குமார் 24, முனீஸ் 23, ஆகியோர் வலுகட்டாயமாக இழுத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண் அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ், ஏ.எஸ்.பி., சிவராமன் ஆகியோர் உத்தரவின்பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பரமக்குடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் ஜன.10 வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் பாண்டிமகாராஜா உத்தரவிட்டார். இதையடுத்து, 4 பேரும் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

Readmore: இரவு சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் நடந்துதான் பாருங்களேன்! எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?