காதலனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததால் கர்ப்பமான நர்சிங் மாணவி, பெற்றெடுத்த சிசுவை உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண், இவர் இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி நர்சிங் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சிலம்பரசன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்ப்பமான மாணவி, நிறைமாதம் என்பதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு சென்றுள்ளார். இவரது தந்தை வெளிநாட்டில் இருக்கும் நிலையில், தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக தெரிகிறது.
பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததால், அதனை உயிருடன் வீட்டு வாசலிலேயே புதைத்துள்ளார். அந்த பக்கமாக சென்ற பெண் ஒருவர், குழந்தையின் அழு குரல் கேட்டதையடுத்து அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போதுமம் குழந்தையின் கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக தோண்டி குழந்தையை வெளியில் எடுத்து முதலுதவி சிகிச்சைக்காக அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, குழந்தையின் தாய் மற்றும் அவரது காதலன் சிலம்பரசன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவர் மீதும் பனையப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்ற எண் 37/2025 ன் படி இயற்கைக்கு மாறாக பெற்ற குழந்தையை மறைத்தல்ம்m 49ன்படி குழந்தையை மறைக்க உடந்தையாக இருத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Readmore: ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு எதிரொலி!. குறுவை சாகுபடியில் டெல்டா விவசாயிகள் மும்முரம்!.