சேலத்தில் சொத்து பிரச்சனையில் தாய், தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிய 2வது மகனை போலீசார் கைது செய்தனர்,

தர்மபுரி மாவட்டம் மணலூரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி கவுரம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் தம்பதியர் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா வி.மேட்டூரில் உள்ள ஒரு கல்குவாரியில் தங்கி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு சொந்த 2.3 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்தநிலையில் சொத்தில் தனக்கு சேர வேண்டிய பாகத்தை பிரித்துக்கொடுக்குமாறு 2வது மகன் சின்னசாமி மூத்த தம்பதியை துன்புறுத்தி வந்துள்ளார். இருப்பினும், தம்பதியினர் சொத்தை பிரித்துக்கொடுக்க முடியாது என்று கூறிவந்துள்ளனர்.

சம்பவத்தன்றும், இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது, அப்போது ஆத்திரமடைந்த சின்னசாமி, நண்பர்களை வரவழைத்து தாயையும், தந்தையும் சரமாரியாக தாக்கினர். இதில் தந்தை பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார், தலைமறைவாக இருந்த சின்னசாமி, சீனிவாசன், ஆகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: எடப்பாடியில் தனியார் பள்ளி வேனில் மாணவர்களிடையே மோதல்..!! கீழே விழுந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!