சேலத்தில் அழுதுக்கொண்டே இருந்தால் ஆத்திரமடைந்த தாயின் கள்ளக்காதலன் 4 வயது குழந்தையை சுவரில் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் குகைப் பகுதியை சேர்ந்த பசுபதி(26). ஓட்டுநரான இவரது மனைவி சண்முகப் பிரியா. இந்த தம்பதிக்கு 6 வயதில் வெற்றிவேல் என்ற மகனும், மாறன் என்ற 4 வயது குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் ஹவுசிங் போர்டை பகுதியை சேர்ந்த தமிழரசன் (22) என்பவருடன் சண்முகப்பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் தம்பதிகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கணவரை பிரிந்து சென்ற சண்முகப்பிரியா குழந்தைகளுடன் தமிழரசனுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பைக்கில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறி 4 வயது குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு சண்முகப்பிரியா அழைத்துச்சென்றுள்ளார். இதையடுத்து, உறவினர்கள் சந்தேகம் அடைந்து, அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, இரவில் மாறன், அடிக்கடி அழுது தொந்தரவு செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன், சிறுவனை சுவரில் அடித்ததாகவும் அதில் மயங்கிய சிறுவனை, பைக்கில் இருந்து விழுந்ததாக கூறி, மருத்துவமனையில் சேர்த்தது தெரியவந்தது.

இதனால் கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்து தமிழரசனை போலீசார் கைது செய்தனர். மேலும் தமிழரசன் மீது ஏற்கனவே இரு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் மாறன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால் கொலை வழக்காக மாற்றிய போலீசார், அதற்கு உடந்தையாக இருந்த சண்முகப்பிரியா வையும் கைது செய்தனர்.

Readmore: நகைகளால் தகதகனு மின்னிய பக்கத்து வீட்டுக்காரி!. தூத்துக்குடியில் இருந்து நாமக்கல்லுக்கு சிட்டாய் பறந்து வந்த இன்ஸ்டா பாய்ஸ்!. ஸ்கெட்ச் போட்டு சொத்தப்பிய பெண்கள்!