சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் மீண்டும் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும்- நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே நாளை (அக். 17) அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்க மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் மீண்டும் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பதிவை நீக்கிய நிலையில், மீண்டும் அதே அலர்ட்டை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது சென்னைக்கு 280 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உள்ளதால் புயலாக மாற வாய்ப்பில்லை எனவும், வடகிழக்கு பருவ மழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, ”காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது சின்னப் புள்ளி மாதிரி இருக்காது. அது ஒரு பரந்த பகுதி. ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்திற்கான அலர்ட். சென்னையில் எல்லா பகுதிகளிலும் 20 சென்டி மீட்டருக்கு மழை பெய்யும் என்று கிடையாது. அலார்ட்டாக இருக்க வேண்டியது அவசியம் என்ற காரணத்தால்; காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நோக்கி அருகில் வர இருக்கின்ற காரணத்தால்; தாழ்வு மண்டலம் வலு இழக்காமல் இருக்கும் காரணத்தால் நடவடிக்கை எடுப்பதற்காக, அலர்டாக இருப்பதற்காக ரெட் அலர்ட் கொடுத்துள்ளோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
Readmore: ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிர்ச்சி!. சேலத்தில் 100 பேரை கைது செய்த போலீஸ்!. என்ன நடந்தது?.