TNEB | தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோர்களிடம் இருந்து மின் கட்டணத்தை வசூலித்து வருகிறது. அதேசமயம், பொதுமக்களின் வசதிக்காகவே, மின்துறையிலும் ஆன்லைன் வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. வழக்கமாக, அரசாங்கத்திற்கு செலுத்தும் கட்டணங்கள் எதுவாக இருந்தாலும் நேரில் சென்று மட்டுமே செலுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது அனைத்துமே எளிதாகிவிட்டது. பொதுமக்களின் வசதிக்காகவே, கட்டணங்களை ஆன்லைனிலேயே செலுத்தும் வசதிகள் அறிமுகமாகியிருக்கின்றன.

இந்நிலையில் தான், மின் கட்டணம் ரூ.5,000 மேல் கட்டுவது தொடர்பாக மின்சார வாரியம் புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி ரூ.5,000-க்கு மேல் இனி ரொக்கமாக கட்டக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்ததாகவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்த தொகை முதலில் ரூ.20,000 ஆக இருந்தது. பின்னர், ரூ.10,000 ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.5,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More : 610 கிலோவில் இருந்து 63 கிலோ..!! 500 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்த நபர்..!! எப்படி சாத்தியம்..?