கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 9) தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து, கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். மாநிலம் முழுவதும் மொத்தம் 3.28 லட்சம் மாணவர்கள் இதனால் பயனடைய உள்ளனர்.
இத்திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், சுமார் 3.28 லட்சம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார வசதி குறைவால், உயர்கல்வி தொடர முடியாதவர்களுக்கு இத்திட்டம் உதவிகரமாக இருக்கும். இதனால், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.