தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சமீப காலமாக பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ரேஷன் பொருட்களின் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி, உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும், எடையில் ஏமாற்றம் இருக்கக் கூடாது என்பதால் பொருட்களை பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இனி ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் சட்டசபை தொகுதிக்கு ஒரு ரேஷன் கடையில் இதுபோன்று பாக்கெட்டுகளில் பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சேலத்தில் ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தமிழகம் முழுவதும் தொகுதிக்கு ஒரு ரேஷன் கடை என தேர்வு செய்து, பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற கடைகளிலும் விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Read More : Mettur Dam | அதிகரிக்கப்படும் நீர் திறப்பு..!! பாதுகாப்பான இடத்துக்கு போங்க..!! ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை..!!