இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முக்கியமான சில வழிமுறைகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். இத்தகைய, உலகையே புரட்டிப் போட்ட கொரோனா, மீண்டும் மெதுவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது, இந்தியாவில் சிலருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கர்ப்பிணிகளுக்கு சில வழிமுறைகளை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தற்போது, இந்த பாதிப்பு மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திடீரென ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவல் உருவாகியுள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு பரவி வருவதால் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. JN.1 எனப்படும் ஒமைக்ரான் BA.2.86 என்ற துணை வேரியண்ட் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா என பல மாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதைதொடர்ந்து, மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, ஜூன் 6 அன்று மட்டும் நாட்டில் 5,364 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 221 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஹைதராபாத் நகரில் பணியாற்றி வந்த ஒருவர், காய்ச்சலால் முந்தையம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பிறகு கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, விழுப்புரத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழகத்தில் பெரிய அளவு பாதிக்கக்கூடிய அளவுக்கு கொரோனா தாக்கம் இல்லை என்றாலும், கர்ப்பிணிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதைதொடர்ந்து, அதிக காய்ச்சல் இருமல் உடல் வலி போன்ற சில பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பின்னர், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. எனவே, தற்போது தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம் இல்லை என்றாலும் தங்கள் பாதுகாப்புக்காக மாஸ்க் அணிவது நல்லது என்றும் தெரிவித்துள்ளது.