கல்யாண வயதில் இருக்கும் தனக்கு பெண் தேடாமல், 2வது திருமணத்திற்கு விளம்பரம் கொடுத்து பெண் தேடிய 65வயது தந்தையின் கழுத்தை அறுத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (65). வனவராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரது மனைவி சண்முகவள்ளி மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்தநிலையில் மகன்கள் தமிழழகன் (23), கிரிவெங்கடேஷ் (17) ஆகியோடன் வசித்து வந்தார். இதற்கிடையே, செல்வகுமார் 2வது திருமணம் செய்வதற்காக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மூத்த மகன் தமிழழகனுக்கும் தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தமிழழகன் தந்தையை இரும்பு பைப்புகளை கழற்றும் ரிங்சால் கடுமையாக தாக்கியதாகவும், மேலும், கத்தியால் தந்தையின் கழுத்தையும் அறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரத்த வௌ்ளத்தில் கிடந்த செல்வகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தமிழழகனை கைது செய்தனர். தமிழழகனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்னை இருந்துள்ளது. தந்தை செல்வகுமாரிடம் பணம் கேட்டு வந்ததாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Readmore: இந்த நோய் இருப்பவர்கள் ஒருபோதும் முட்டையை சாப்பிடக்கூடாது..!! ஏன் தெரியுமா..? மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி காரணங்கள்..!!