கருப்பூர் அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள கொட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (44). இவர், கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் தன் மனைவியைப் பிரிந்து தனியே வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக ராமகிருஷ்ணன் வீட்டிற்கு யாரும் செல்லாத நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, ராமகிருஷ்ணன் உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராமகிருஷ்ணன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி மயக்க நிலையில் இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இதனால் ராமகிருஷ்ணன் மர்மமான முறையில் இறந்தாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more “ஒரே கிளிக்கில் கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா”..!! புதிய சர்வே எண்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!