தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை உதவி தொகை பெறாத தகுதியான பெண்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை ரூ.1000 உதவித் தொகை பெறாத தகுதியுள்ள பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுவரை பலர் புதிய ரேஷன் கார்டு பெற்றிருந்தாலும், சிலர் முன்பு விண்ணப்பித்தும், தகுதியுடன் இருந்தும் உதவித் தொகை பெற முடியாமல் இருந்தனர். இந்நிலையில், அவர் இம்மாதம் 29ஆம் தேதி முதலே விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறை, ரேஷன் கடைகள் வழியாக அல்லாமல், “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த முகாம்களில் நேரில் சென்று, தேவையான ஆவணங்களுடன் (ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விவரம் போன்றவை) விண்ணப்பிக்க வேண்டும். அரசு தரப்பில் இந்த மனுக்களை உடனடியாக ஆய்வு செய்து, விண்ணப்பம் செல்லுபடியாக இருந்தால், இரண்டு மாதத்திற்குள் ரூ.1000 உதவி தொகையை வங்கி கணக்கில் நேரடியாக போடப்படும்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1.14 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 பெறுகின்றனர். ஆனால் இன்னும் 1.12 கோடி பெண்கள் இந்த திட்டத்தில் சேராத நிலையில் உள்ளனர். இவர்களுக்காகவே அரசு இந்த புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்பெற்று, உரிமை தொகையை பெற உரிய ஆவணங்களுடன் முன் தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read more தொடர் மழை..!! தண்ணீரில் அழுகி சேதமான பருத்தி செடிகள்..!! தேவூரில் அதிகாரிகள் நேரில் ஆய்வு..!!