குடும்பப் பிரச்சனையை சமாதானம் செய்ய குலதெய்வ கோவிலுக்கு சென்ற இளம்பெண், பூசாரி விபூதி அடித்ததையடுத்து திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 26 வயதான இளம்பெண் பிரியா. இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்துள்ளது. இதனால் பிரியா அவரது தாயார் வீட்டில் இருந்து வருகிறது. இந்தநிலையில், கணவர் கவுதமுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு கணவர் கவுதம் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர், சமாதானமாக பேசி பிரச்சனையை தீர்க்க குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு கவுதமின் தம்பி கவுசிக் தான் பூசாரியாக இருந்துள்ளார். அப்போது, பிரியாவின் தலையில் விபூதி பூசிச் செவி மேலே அடித்ததாகவும், அதைத்தொடர்ந்து, பிரியா திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து மதுரை கோட்டாட்சிய ஷாலினி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Readmore: வாவ்!. மொபைல் UPI மூலம் பணம் அனுப்புபவர்களுக்கு இப்படியொரு சிறப்பு சலுகையா?. மத்திய அரசு சூப்பர் திட்டம்!