இரு மீனவ கிராமங்களிடையே மோதல் காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நடுவூர் மாதா குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து வருகின்றனர். இதுதொடர்பாக இரு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் இந்த கிராமங்களில் இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த பகுதிக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர்(24) என்பவரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியில் தனியாக இருந்த இளம்பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டதையடுத்து, காவலர் சுதாகர் அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அலறியடித்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினரிடம் இளம்பெண் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து, இளம்பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குபதிவு செய்த போலீசார் சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக போடப்பட்டிருந்த போலீசாராலேயே பாதுகாப்பு இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: 2 வயது குழந்தை மீது மயங்கி விழுந்த பாட்டி!. இருவரும் பலியான பரிதாபம்!. நாமக்கல்லில் சோகம்!