கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதனடிப்படையில், சேலம் உள்பட 15 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேட்டூர், மேச்சேரி, வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், அயோத்தியாப்பட்டணம், அம்மம்பாளையம், ஆத்துார், காடையாம்பட்டி, இளம்பிள்ளை போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இரவு தொடங்கிய மழை, காலை வரை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பாய்ந்தோடுகிறது.

அதாவது, நேற்று இரவு பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து தேங்கியது. குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கியது இதனால் பேருந்து பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல், சேலத்தில் ஞாயிற்றக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால் 2 வீடுகள் இடிந்தன. காந்தி மைதானத்தில் குளம்போல மழைநீா் தேங்கியதால் நடைப்பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது.

சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. வெயில் தாக்கம் குறைந்து காணப்பட்டபோதிலும், இரவு நேரங்களில் பெய்யும் மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. இந்த கனமழைக்கு சேலம் நான்கு சாலை, சிஎஸ்ஐ ஆங்கிலேயா் கல்லறைத் தோட்டம் அருகில் 2 வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்தன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. செவ்வாய்ப்பேட்டை பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதையில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

குறிப்பாக நள்ளிரவு பெய்த மழை காரணமாக, திங்கள்கிழமை காலை காந்தி மைதானத்தில் மழைநீா் தேங்கியதால் நடைப்பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நடைப்பயிற்சிக்கு வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 566.5 மி.மீ. மழை பதிவானது.

Readmore: பழனி முருகன் கோவிலில் பரபரப்பு!. அட்டையை வைத்து கைவரிசை!. நூதன முறையில் உண்டியல் பணத்தை அபேஸ் செய்த நபரால் அதிர்ச்சி