நாமக்கல்லில் திடீரென மயக்கம் ஏற்பட்டதில் தரையில் படுத்திருந்த 2 வயது குழந்தை மீது பாட்டி விழுந்ததில், இருவரும் பலியான சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாமக்கல் அடுத்த வீசாணம் கடகால் புதூரைச் சேர்ந்தவர்கள் அருண்குமார்-காயத்ரி தம்பதி. அருண் குமார் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதால், மனைவி, 2 வயது குழந்தை சாய் கிரிஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர்களது மகன் சாய்கிரிஷ், நாமக்கல் இ.பி.காலனியில் உள்ள பாட்டி சாந்தி வீட்டில் இருந்து வந்தான்.

இதற்கிடையே, நேற்று அருண்குமார், காயத்ரி ஆகிய இருவரும் நேற்று மாலை நாமக்கல்லில் உள்ள மாமியார் சாந்தி வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, தரையில் படுத்திருந்த குழந்தை சாய்கிரிஷ் மீது பாட்டி சாந்தி குப்புறக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக, அவர்களை இருவரையும் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை சாய் கிரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல அவரது பாட்டி சாந்தியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Readmore: விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..!! பெற்றோர்களே உஷார்..!! காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு..!!