விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்கள் காரில் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் குறித்து ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆந்திரப் பிரதேசம், விஜயநகரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு துயரமான சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. துவாரபுடி கிராமம் அருகே, மகிளா மண்டல் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை சுற்றி விளையாடிக்கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் அதில் ஏறியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் உள்ளே இருந்தபோது கதவுகள் தானாகவே பூட்டப்பட்டன. அப்போது, குழந்தைகள் காரில் சிக்கிக் கொண்டனர். வெளியே யாரும் கவனிக்காத நிலையில், அவர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் காலையில் நடைபெற்ற நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காணவில்லை என் தேடிக்கொண்டிருந்தனர். அப்போது, காருக்குள் பார்த்தபோது உதய் (வயது 8), ஷாருமதி (வயது 8), கரிஷ்மா (வயது 5), மானஸ்வி (வயது 6) ஆகியோர் உயிரிழந்திருப்பது தெரிவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில அமைச்சர் கொண்டப்பள்ளி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “ஒரு குடும்பம் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்தது. குழந்தைகள் அருகிலுள்ள காரை பார்த்து விளையாடிக் கொண்டிருந்தனர். கவனிக்காமல் உள்ளே சென்றபோது கதவுகள் பூட்டப்பட்டதால், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது” என்றார். மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிகழ்வு குழந்தைகளின் பாதுகாப்பு மீதான கவனத்தை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ஆதார் கார்டு அப்டேட்..!! இந்த தேதி தான் கடைசி..!! இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!