மேட்டூர் அருகே சாலை விபத்தில் கணவன் – மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாசிலாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (32). இவர், பந்தல் அமைக்கும் தொழிலாளி ஆவார். இவருக்கு ஜமுனா (32) என்ற மனைவியும், சஜித் (12), அஸ்விந்த் (9) ஆகிய மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நேற்று கணவன், மனைவி இருவரும் ஸ்கூட்டரில் கொளத்தூரில் இருந்து சென்னம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மோலப்பாறையூர் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் அங்கிருந்த தரைப்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது.
இந்த விபத்தில் கணவன், மனைவி இருவருமே 2 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொளத்தூர் போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வசந்தகுமார், ஜமுனா ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது, பெற்றோரை இழந்த 2 குழந்தைகளையும் உறவினர்களுடன் சேர்ந்து அழுதது காண்போரை கலங்க வைத்தது.