சங்ககிரி அருகே உடல் எடை குறைப்பு நிபுணர் கொலை வழக்கில் கூலிப்படையை ஏவி மனைவி, மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி பக்காளியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு வயது 65. இவர் உடல் எடை குறைப்பு நிபுணராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ராணி என்ற மனைவியும். கார்த்திகா என்ற மகளும். அரவிந்த் என்ற மகனும் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராஜேந்திரன் திருச்செங்கோடு பிரிவு பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்துக் கொண்டு உடல் எடை குறைப்பு மருந்துகளை விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில். ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி சிந்து. இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் கவுதம் கோவில் நேரில் சென்று ஆய்வு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் கொலையாளிகள் பாண்டிச்சேரியில் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் மனோஜ்குமார், சிவசங்கர், சசிகுமார், லோகபிரகாஷ், கௌதம், ரகுநாத், கார்த்திகேயன் ஆகிய 7 பேரையும் கைது செய்து சங்ககிரி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜேந்திரனுக்கும் அவரது மகன் அரவிந்துக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. அதே நேரத்தில் திருமணம் செய்து கொள்வதற்கு பெண் பார்க்கும் போதெல்லாம் தந்தை வேறு வழியில் சென்று அதனை தடுத்து நிறுத்தி வந்துள்ளார்.

இதனால், கோபமடைந்த அரவிந்த் கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதில் அரவிந்த் மனோஜ்குமாரிடம் ரூ.4 லட்சத்தை கொடுத்து தந்தையை தீர்த்துக் கட்ட பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த கொலை குற்றத்திற்கு காரணமான ராஜ்குமாரின் மனைவி ராணி, மகன் அரவிந்த் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.