மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடந்து வரும் நெருக்கடியின் மத்தியில், சிறையிலிருந்து தப்பியோடிய 165 பெண் கைதிகளில் பெரும்பாலானோர் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்து கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை அளித்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஜனவரி 27 அன்று கோமாவில் M23 கிளர்ச்சியாளர்கள் மற்றும் காங்கோ படைகளுடன் மோதல் ஏற்பட்டது. சிறையில் ஏற்பட்ட மோதலில் 4,000 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினர். தப்பியோடிய கைதிகளில் சிலர் சிறைக் காவலர்களால் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கோமா சிறையில் ஏற்பட்ட வன்முறையில், கைதிகள் சிறையில் இருந்து தப்பிச் செல்லும் முன்பாக பெண்கள் சிறை பகுதிக்கு சென்று அங்கு அடைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட பெண் கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதாவது 141 பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
கோமாவை தளமாகக் கொண்ட ஐ.நா. அமைதி காக்கும் படையின் துணைத் தலைவர் விவியன் வான் டி பெர்ரே கூறுகையில், 4,000 ஆண் கைதிகள் தப்பிச் சென்றதை உறுதிப்படுத்தினார். இதற்கிடையில், சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு தீக்கிரையாக்கப்பட்டது, மேலும் பெண்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சிறையில் பெண்கள் கற்பனை செய்ய முடியாத கொடுமைக்கு ஆளானதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டதை விட மரணம் மற்றும் அழிவின் படங்கள் வேதனையளிக்கின்றன. ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்த பல நூறு பெண்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
ஒன்பது முதல் 13 பெண் கைதிகள் மட்டுமே உயிருடன் தப்பினர். அவர்களும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பெண் கைதிகள் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட விவகாரத்தில் உள்நாட்டு நீதித்துறை அதிகாரிகளின் விசாரணை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஐ.நா தரப்பில் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் சரியானதாக இருக்கிறது.