ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றியை உறுதி செய்துள்ளார். பதிவானவற்றில் 50% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து கடந்த 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 67.97% வாக்குகள் பதிவாகின. திமுகவின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கீதா லட்சுமி மற்றும் சுயேட்சைகள் உட்பட 46 பேர் களத்தில் இருந்தனர். இந்தநிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதற்காக 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. 17 சுற்றுகளாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இதுவரை 14 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. 14-வது சுற்றில் சந்திரகுமார் 96,450 வாக்குகளும், சீதாலட்சுமிக்கு 20,384 வாக்குகளும், நோட்டா 5,075 வாக்குகளும் பெற்றுள்ளன. பதிவானவற்றில் 50% வாக்குகளை பெற்ற சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டெபாசிட் பெறவேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி 26 ஆயிரம் வாக்குகளை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: மகனை கவனிக்காமல் மொபைலை பார்த்தப்படி வந்த தந்தை!. அலட்சியத்தால் 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!. பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!.