சேலம் மாவட்டம் மேச்சேரி, கொளத்துார் வட்டாரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கு, விவசாயிகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியுள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் பிஎம் கிசாம் திட்டம். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு தவணை முறையில் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு அடையாள அட்டையை வழங்க மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. இது ஆதார் கார்டு போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் விவசாய அடையாள அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் சேலம் மாவட்டம் மேச்சேரி, கொளத்துார் வட்டாரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கு, விவசாயிகள் கணக்கெடுப்பு பணி நேற்று நடைபெறவிருந்த நிலையில், கணினி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், இந்தப் பணி இன்று தொடங்கியுள்ளது. விவசாயிகளை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்கள், வேளாண் தொழில்நுட்ப முகமை திட்ட பணி அலுவலர்கள், சமுதாய பண்ணை மகளிர் உள்ளிட்டோர் ஈடுபடவுள்ளனர்.

Read More : சீமானை விடுவிக்க முடியாது; தொடர்ந்து அவர் நீதிமன்றப் படியேறினால்தான் நிதானம் வரும்!. உயர்நீதிமன்றம் அதிரடி!