நாம் வாழும் சூழல், குறைவான சூரிய பாதுகாப்பு மற்றும் மாசுபாடு போன்றவற்றால் சருமமும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சருமத்தின் தரத்தை பராமரிக்க வேண்டியது முக்கிய, ஆனால் அது எளிதான காரியம் இல்லை. இதற்காக பல சரும பராமரிப்பு பொருட்கள் சந்தையில் விற்க்கப்படுகிறது. ஆனால் அவை சரியான தீர்வை தருவதில்லை. முகப்பரு. நிறமி பிரச்சனையை நீக்க சில இயற்கை முறைகளை பயன்படுத்தினால் சிறந்த தீர்வை தரும். அப்படிப்பட்ட ஒரு சருமப் பராமரிப்பு முறையைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

இளமையாக இருக்க முகத்தை உப்பு கலந்த தண்ணீரில் கழுவலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்காக, அரை கிளாஸ் தண்ணீர் மற்றும் இரண்டு தேக்கரண்டி உப்பு. குறிப்பாக, கடல் உப்பு என்றால் இன்னும் சிறந்தது, அதை சேர்த்து உடனே கலக்கவும். மேக்கப்பைக் கழுவிய பிறகு சுத்தமான முகத்துடன், இந்த உப்புத் தண்ணீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். “உங்கள் தோலில் உப்பு துகள்கள் நிறைந்திருக்கலாம். எனவே, ஒரு துண்டு அல்லது ஒரு லேசான துணி கொண்டு நீங்கள் அதை துடைக்க வேண்டும். இந்த உப்புத் துகள்கள் அனைத்தும் உறிஞ்சப்படுகிறது, பின்னர் நீங்கள் தூங்கச் செல்கிறீர்கள்.

முதல் நாள், அது உங்களுக்கு குத்தல் போன்ற உணர்வை தரலாம், ஆனால் இரண்டாவது நாளில், இதுபோன்ற உணர்வு இருக்காது. காலையில், நீங்கள் பிரகாசமான முகத்துடன் எழுந்திருப்பீர்கள், உங்களது முகத்தில் இருக்கும் துளைகள் இறுக்கமடைந்து, உப்பு உறிஞ்சப்பட்டு இரவு முழுவதும் தங்கியிருப்பதால் இது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

Readmore: அதிமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் கட்சியில் இருந்து நீக்கம்!. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி!