மாயமான 3 சிறுமிகள், காதலர்களுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த சம்பவத்தில் 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் 8ம் வகுப்பு பயின்று வரும் 12 வயது சிறுமி கடந்த 24ம் தேதி மாலை தனது பள்ளி தோழியின் இல்ல விழாவுக்கு சென்று வருவதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், சிறுமி வீடு திரும்பாத நிலையில், அவரது தாயார் திரு.வி.க.,நகர் போலீஸில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை முன்னெடுத்தனர். சிறுமியின் செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து தேடிய நிலையில், வீனஸ் நகரில் சிறுமி இருப்பது உறுதியானது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போலீசார், சிறுமி இளைஞருடன் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதாவது, அரசு நூலகம் மேலே தனது 2 தோழிகள் மற்றும் 3 ஆண் நண்பர்களுடன் சிறுமி உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று சிறுமிகள் மற்றும் அவரது ஆண் நண்பர்களை மீட்ட போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், 12 வயது சிறுமியின் நண்பர்களான 14 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுமி ஆகியோருடன் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த கலிமுல்லா என்கிற அலி (21), அகரம் செங்கல்வராயன் தெருவை சேர்ந்த அபிஷேக் (19) மற்றும் பெரம்பூர் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் என மூன்று பேரும், சிறுமிகளுடன் 24ம் தேதி இரவு நூலகத்தின் மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட சிறுமிகளை முத்தியால்பேட்டையில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சிறுமிகளின் காதலர்கள் 3 பேர் மீதும் போக்சோ வழக்கில் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். கைதான கரிமுல்லா மீது 11 வழக்குகளும், அபிஷேக் மீது 6 வழக்குகளும், 16 வயது சிறுவன் மீது 6 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: பெரும் துயரம்!. கேரட் சாப்பிட்ட 2 வயது குழந்தை மரணம்!. மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடிதுடித்த பரிதாபம்!