குடும்பத் தகராறில் எதிர்த்து பேசியதால், மனைவியின் உதட்டை கடித்து குதறிய கணவனின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா அருகிலுள்ள நக்லா புச்சான் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு, மனைவி, பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 24ம் தேதி அவரது மனைவி வழக்கம் போல் வீட்டு வேலை செய்துக்கொண்டிருந்தார். அப்போது வெளியே சென்று விட்டு வீட்டிற்கு விஷ்ணு கோவத்துடன் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, காரணமின்றி சண்டையிட்டதால் அமைதியாக இருக்கும்படி மனைவி விஷ்ணுவிடம் கூறியுள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த விஷ்ணு, “நான் வாயை மூட வேண்டுமா? இந்த வாய் இருந்தால் தானே, நீ என்ன எதிர்த்துப் பேசுவ” என்று கூறி அவர் தனது மனைவியின் வாயைக் கடித்ததாகவும் தடுக்க முயன்ற தனது மனைவியின் சகோதரியையும் கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ரத்த சொட்ட சொட்ட வலியில் துடித்த மனைவியை, மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு உதட்டில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது. வீட்டிற்கு திரும்பி சென்ற மனைவியை, மாமியாரும், மைத்துனனும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று பெற்றோர்கள் புகார் அளித்தனர். மேலும் தனக்கு நடந்த கொடுமைகளை வாய் விட்டுக்கூட சொல்ல முடியாத நிலையில், காகிதத்தில் எழுதி போலீசாரிடம் காண்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

Readmore: சேலம்| அரசு கல்லூரி முதல்வர் வீட்டில் 50 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை!. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் மர்மநபர்கள் கைவரிசை!. தீவிர விசாரணை!