நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், நாயை கொன்று ஒத்திகை பார்த்துவிட்டு பிறகு மனைவியை கொன்று உடல்களை குக்கரில் வேகவைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. முன்னாள் ராணுவ வீரரான இவர், ஹைதராபாத்தில் உள்ள டி.ஆர்.ஓவில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி வேங்கட மாதவி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் இரு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால் குருமூர்த்தி, அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சங்கராந்தி பண்டிகை விடுமுறையை யொட்டி குழந்தைகளை மாதவியின் தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். சம்பவதன்று (ஜனவரி 16) மாதவியின் பெற்றோர் அவருக்கு தொலைப்பேசியில் அழைத்துள்ளனர். பதில் இல்லாததால் சந்தேகமடைந்த பெற்றோர் மீர்பேட் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மாதவி காணாமல் போனது தொடர்பாக போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது, அவர்களுக்கு கணவர் குருமூர்த்தி மீது சந்தேகம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீஸார் குருமூர்த்தியிடம் கடுமையாக விசாரித்துள்ளனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு உடல் பாகங்களை துண்டு துண்டுகளாக்கி பிரிட்ஜி வைத்துள்ளார். பின்னர், எலும்புகளை எப்படி கரைப்பது என்பது குறித்து இங்கிலீஷ் படங்கள் மற்றும் யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து நாயை கொன்று அதன் உடல்களை குக்கரில் வேகவைத்து, பின்னர் வெயிலில் காயவைத்து அதனை பொடியாக்கி ஏரியில் கரைத்ததாக கூறியுள்ளார். இதே பாணியில், குருமூர்த்தி தன்னுடைய மனைவியின் உடல்களையும் குக்கரில் வேகவைத்து, பின்னர் பொடியாக்கி மீராபேட் ஏரியில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

Readmore: திக் திக்!. 3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!. என்ன நடந்தது?. பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!..