தலைமை ஆசிரியருக்கு பள்ளி மாணவன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அனக்கரா பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, மாணவன் ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளிக்கு மாணவர்கள் யாரும் செல்போன் கொண்டு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பிளஸ் 1 மாணவ செல்போனை தவ்லத்தாக எடுத்து வந்துள்ளார். இதனை கவனித்த வகுப்பாசிரியர்கள், இனி செல்போன் கொண்டு வரக்கூடாது என மாணவனை எச்சரித்துள்ளனர்.

ஆனால், அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத மாணவன், தொடர்ந்து பள்ளி வகுப்பறையிலேயே செல்போனை பயன்படுத்தி வந்துள்ளான். சம்பவத்தன்று வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் செல்போனை பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த ஆசிரியர் கடுப்பாகி, மாணவனின் செல்போனை பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், ஆசிரியரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், அந்த ஆசிரியர் செல்போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார். இதனால், ஆத்திரம் தலைக்கேறிய மாணவர், நேராக தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் சேரை இழுத்துப் போட்டு தலைமை ஆசிரியரின் முன்பே தோரணையாக உட்கார்ந்து செல்போனை கொடுத்து விடுமாறு ஆக்ரோஷமாக மிரட்டியுள்ளான். இதனால் வௌவௌத்துப் போன தலைமை ஆசிரியர் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். மேலும், அந்த மாணவன் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் மரியாதைக் குறைவாக பேசியபடியே இருந்தார்.

இருந்தபோதும் செல்போனைத் தர தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டார். இதனால் புயலென பொங்கி எழுந்த மாணவன், “செல்போனை திரும்ப தராவிட்டால் பள்ளியை விட்டு வெளியே வரும்போது கொன்று விடுவேன்” என்று தலைமை ஆசிரியரை பகிரங்கமாக மிரட்டிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார். மாணவன் கொலை மிரட்டல் விடுத்த போதும் எதிர்காலம் கருதி அவர் மீது பள்ளி நிர்வாகம் புகார் எதுவும் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, அவரது ஒழுக்கக்கேடான செயலை எடுத்துக் கூறி எச்சரித்தனர்.

Read More : “ஏய் நீ என் பேண்ட் குடு டி”; “நீ என் சேலைய குடு டா”!. எடப்பாடி ரோட்டில் ஆடைகளை கிழித்துக்கொண்டு சண்டை போட்ட இருவர்!. எதுக்கு தெரியுமா?