சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு உணவுகள், சர்க்கரை பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் சர்க்கரை உணவுகளின் காரணமாக பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சாக்லேட், பானங்கள் போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்வதால் உடல் பருமன், இதய பாதிப்பு மற்றும் சிறு வயதிலேயே சர்க்கரை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, மாரடைப்பு, வகை 2 நீரிழிவு நோய், கல்லீரல் பிரச்சினைகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரசனைகளுக்கு சர்க்கரை உட்கொள்வதே காரணம் எனக் கூறப்படுகிறது. வீட்டு சமையலறையில் இருக்கும் கண்ணுக்கும் தெரியும் வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை விட ”ஃப்ரீ சுகர்” (Free) எனப்படும் கண்ணுக்குத் தெரியாத சர்க்கரையையே குழந்தைகள் அதிகம் உட்கொள்வதாக உலக சுகாதார அமைப்பும், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையான NHS-ம் கூறுகின்றன.
12 மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்குப் பழச்சாறு தேவையே இல்லையென்றும், அப்படிக் கொடுக்க விரும்பினால் அதிக தண்ணீரைக் கலந்த பழச்சாரை (1 பகுதி பழச்சாறுக்கு 10 பகுதி தண்ணீர்) உணவுடன் சேர்த்துக் கொடுக்கலாம் என NHS கூறுகிறது. 5 வயது முதல் தண்ணீர் கலக்கப்படாத பழச்சாறை கொடுக்கலாம் எனவும் ஆனால், 1 கிளாசுக்கு (150மில்லி) மேல் கொடுக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
உணவு மற்றும் பானங்கள் மூலம் நமக்குத் தினமும் கிடைக்கும் கலோரிகளில், 5 சதவீதத்தை ஃப்ரீ சுகர் தாண்டக்கூடாது எனவும், இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு சர்க்கரையே கொடுக்கக்கூடாது எனவும் ’இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்- தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்’ சார்பில் வெளியிடப்பட்ட ’இந்தியர்களுக்கான உணவு வழிமுறை’ கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான குழந்தைகள் ஆப்பிள், கேரட், ப்ரோக்கோலி, வாழைப்பழங்கள் போன்ற பழங்கள், காய்கறிகளை உள்ளடக்கிய போதுமான புதிய தயாரிப்புகளை சாப்பிடுவதில்லை. ஏனெனில், அவர்களுக்கு சர்க்கரை மீதான நாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே, குழந்தைகளுக்கு, நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த முழு பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது குழந்தைகள் முழுமையாக உணர வைக்கவும், மனநிறைவின் ஒரு முக்கிய பகுதியாகவும் விளங்குவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. எனவே உணவு மற்றும் சிற்றுண்டிகளில் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பதன் மூலம் குழந்தைகள் சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தலாம்.
குழந்தைகள் பெரும்பாலும் சோடாக்கள், விளையாட்டு பானங்கள், எலுமிச்சைப்பழம், எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களையே அதிகம் விரும்புகின்றனர். இதைத் தவிர்த்து, குழந்தைகளுக்கு பெரும்பாலும் தண்ணீர் அல்லது குறைந்த கொழுப்பு நிறைந்த பால் போன்ற ஆரோக்கியமான உணவுமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் ஆப்பிள் பழச்சாறு குடிப்பதற்கு பதிலாக ஆப்பிள் போன்ற முழு பழங்கள் எடுத்துக் கொள்வதை பழக்கப்படுத்த வேண்டும்.
சிலர், வீடுகளில் சமைக்கும் உணவை விட, வெளியில் விற்பனை செய்யும் உணவுகளுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால், நாம் எவ்வளவு அதிகமாக நாம் உண்ணுகிறோமோ, அந்த அளவுக்கு அதன் அபாயமும் அதிகரிக்கும். பெரும்பாலும் உணவகங்களில் உள்ள உணவுகளின் சுவையை அதிகரிக்க சர்க்கரை மற்றும் வேறு சில பொருள்களைச் சேர்க்கின்றன. ஆனால், இந்த உணவுகள் காலப்போக்கில் உடல் அபாயத்தை ஏற்படுத்தலாம்.