பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜனவரி 22) புதன்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக பின்வரும் பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படும் என்பதால், சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எடப்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எடப்பாடி நகரம், வெள்ளார் நாயக்கன்பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூர், வேலம்மா வலசு, தங்காயூர், அம்மன் காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அதேபோல், பூலாம்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுகுறிச்சி, வன்னிய நகர், வளைய செட்டியூர், கள்ளுக்கடை, சித்தூர், வெடிக்காரன்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம், குஞ்சாம்பாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூர், பொன்னம்பாளையம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்படும்.