திடீர் மரணத்தால், குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, வங்கி கணக்குகள் மற்றும் பாதுகாப்பு லாக்கர்களில் நாமினிகளை கட்டாயமாக்குமாறு ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் எங்கு சென்றாலும் Gpay, Phonepe UPI செயலிகள் மூலம் தான் அதிகளவில் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது RBI (இந்திய ரிசர்வ் வங்கி) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கிகளில் அனைத்து விதமான கணக்குகளுக்கும் நாமினி (வாரிசுதாரர்கள்) கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. பல NBFC வங்கிகளில் டெபாசிட் அக்கவுண்ட்களுக்கு நாமினி விவரங்கள் பெறப்படுவதில்லை. இதனால், கணக்கு வைத்திருப்போரின் மறைவுக்குப் பின் உறவினர்கள் அந்தப் பணத்தை பெறுவதில் சிரமம் நீடிக்கிறது. இதற்கு தீர்வு காண, FD உள்ளிட்ட அனைத்து கணக்குகளுக்கு நாமினி அவசியம் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான கணக்குகளில் நாமினிகளின் பெயர்கள் இல்லை என்று சுட்டிக்காட்டிய ரிசர்வ் வங்கி, வைப்புத்தொகையாளர் / வைப்புத்தொகையாளர்களின் மரணத்தால் குடும்ப உறுப்பினர்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும், கோரிக்கைகளை விரைவாகத் தீர்ப்பதற்கும் இந்த நாமினி வசதி நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் “இறந்த வைப்புத்தொகையாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிரமத்தையும் தேவையற்ற சிரமத்தையும் தவிர்க்க, வைப்புத்தொகை கணக்குகள், பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு லாக்கர்களை வைத்திருக்கும் அனைத்து தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் நாமினி பெயரைப் பெற வேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது. இயக்குநர்கள் குழுவின் வாடிக்கையாளர் சேவைக் குழு (CSC) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சேர்க்கை கவரேஜ் சாதனையை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியது. இது தொடர்பான முன்னேற்ற அறிக்கை மார்ச் 31, 2025 முதல் காலாண்டு அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் தக்ஷ் போர்ட்டலில் வெளியிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கிளைகளில் உள்ள முன்னணி ஊழியர்களுக்கு பரிந்துரைகளைப் பெறுவதற்கும், இறந்த உறுப்பினர்களின் கோரிக்கைகளை முறையாகத் தீர்ப்பதற்கும், நாமினிகள் /சட்டப்பூர்வ வாரிசுகளைக் கையாள்வதற்கும் தகுந்த பயிற்சி அளிக்கப்படலாம் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.