ஸ்கூல் படிக்கும் வயதில் ஒரு கேர்ள் பிரண்டுக்காக 2 மாணவர்கள் சண்டையிட்டு அடித்துக் கொண்ட சம்பவம் தேனி பெரியகுளத்தில் அரங்கேறி இருக்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இருவரும் ஆபாசமான வார்த்தைகளால் பேசி திட்டிக் கொண்டதுடன் ஒருவருக்கொருவர் மாறி மாறி கொலை மிரட்டலும் விடுத்துக்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவ, மாணவிகள் இருவரையும் விலக்கி விட்ட போதும் இருவரும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களது மோதல் குறித்து சக மாணவ, மாணவிகள் தெரிவிக்கையில், இரண்டு மாணவர்களும் ஒரே பெண்ணை (சிறுமியை) காதலிப்பதாகவும், இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் காதல் போட்டி காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் பெரியகுளம் பேருந்து நிலையம் பகுதியில் பெண்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பாக பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் பதிவு செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Readmore: மாநில கட்சியாக உருவெடுத்தது நாம் தமிழர் கட்சி!. தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!. தொண்டர்கள் மகிழ்ச்சி!