அண்ணியுடன் திருமணம் செய்துவைக்கக் கோரி அடம்பிடித்த ஓரினச்சேர்க்கை இளம்பெண்ணை உறவினர்கள் விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டம், பெஹாடா முஜாவர் கிராமத்தை சேர்ந்தவர் திருமணமான பெண். தனது கணவருடன் வசித்து வரும் நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த உறவுக்கார பெண்ணான, இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், திருமணமான பெண், அந்த இளம்பெண்ணுக்கு அண்ணி உறவு முறை என்று கூறப்படுகிறது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அதாவது, இருவரும் ஒரேபாலின ஈர்ப்பு(ஓரின சேர்க்கை) காதல் வயப்பட்டதாக தெரிகிறது. இந்த விஷயம் இருதரப்பு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த இரு பெண்களும் தவறான முடிவை எடுத்துள்ளனர். அதாவது, இரு பெண்களும், சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். இதையடுத்து அவர்களை மீட்டு பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது, இளம்பெண், அண்ணியுடன் தான் வாழுவேன் என அடம்பிடித்துள்ளார். ஒருகட்டத்தில் திருமணமான பெண்ணின் உறவினர்கள், இளம்பெண்ணுக்கு விஷம் கொடுத்த கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதனால், இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.