தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த பிறந்த 23 நாட்களே ஆன குழந்தை புரையேறியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி நன்மங்கலம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசிப்பவர் ராம்ஜி, சாப்ட்வேர் இன்ஜினியராக வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி ஹரிபிரியாவுக்கு கடந்த 23 நாட்களுக்கு முன் 2வதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஹரிப்பிரியா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது குழந்தைக்கு புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிப்பிரியா, அக்கம்பக்கதினர் உதவியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக ஹரிப்பிரியாவிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: தினமும் ‘செக்ஸ்’ டார்ச்சர்..!! பெற்ற மகளிடமே அத்துமீறல்..!! கணவனை கொன்று உடலை துண்டாக்கி வயலில் வீசிய மனைவி..!!