தினமும் குடித்துவிட்டு தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தது மட்டுமின்றி, பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய முயன்றதால், கணவனை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வயல் வெளியில் வீசியுள்ளார் மனைவி.
கர்நாடக மாநிலம் உமாராணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்தா இட்னாலி (40). இவரது மனைவி சாவித்ரி (35). கணவர் ஸ்ரீமந்தா குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் குடித்துவிட்டு வந்து, மனைவியிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில், டிசம்பர் 8ஆம் தேதி நடந்த சண்டையின்போது, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மனைவி, குடிகார கணவனை கொலை செய்துள்ளார்.
பின்னர், கணவரின் உடலை துண்டுத் துண்டுகளாக வெட்டி வயல் வெளியில் வீசியுள்ளார். டிசம்பர் 10ஆம் தேதி அவ்வழியாக சென்றவர்கள் துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஸ்ரீமந்தாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். மனைவியிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தில், “என் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து, என்னை உல்லாசத்திற்கு அழைப்பார். அதேபோல், சம்பவத்தன்றும் என்னை அழைத்தார். அதற்கு நான் மறுத்ததால், எனது 13 வயது மகளை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால், கோபமடைந்த நான் எனது கணவரை கொலை செய்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
கணவர் அளவுக்கு அதிகமாக தன்னை கொடுமை செய்தபோதும் பொறுத்துக் கொண்ட மனைவி சாவித்ரி, தன்னுடைய மகளை, கணவர் சீண்ட சென்றதுமே உச்சக்கட்ட கோபம் அடைந்துள்ளார். அப்போது, அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து வந்து, கணவரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், அவர் உயிரிழந்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல், அரிவாளை எடுத்து வந்து கணவரின் உடலை துண்டுத் துண்டாக வெட்டியுள்ளார்.
பின்னர், சடலத்தை எப்படி மறைப்பது என்று தெரியாமல் விழித்த சாவித்ரி, வீட்டிலிருந்த சிறிய டிரம்மில் சடலத்தை போட்டு, அந்த டிரம்மை உருட்டியபடியே வீட்டிற்கு சிறிது தூரத்தில் இருக்கும் வயல்வெளிக்கு கொண்டு வந்துள்ளார். பின்னர், டிரம்மில் இருந்த உடல் துண்டுகளை வயலில் வீசியெறிந்துள்ளார். மேலும், கொலை செய்ய பயன்படுத்திய கல், கத்தியையும் கிணற்றில் போட்டுள்ளார். பிறகு, அந்த டிரம்மை சுத்தமாக கழுவி, கிணற்றில் போட்டுள்ளார்.
வீட்டில் ரத்தக்கறை படிந்த மெத்தை, உடைகளை அனைத்தையும் கல்லைக்கட்டி, அதே கிணற்றில் தூக்கி வீசியுள்ளார். வீடு முழுவதும் இருந்த ரத்தக்கறைகளை கழுவி சுத்தம் செய்துவிட்டு, ஆடைகளை தீவைத்து கொளுத்து, அந்த சாம்பலை வீட்டிற்கு வெளியே உள்ள குப்பையில் வீசியுள்ளார். பின்னர், நடந்த சம்பவத்தை பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று தன்னுடைய பெண் பிள்ளைகளிடமும் எச்சரித்துள்ளார். மேலும், கணவரின் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். இவ்வளவையும் செய்து முடித்துவிட்டு, தன்னுடைய உடம்பிலிருந்த ரத்தக்கறை நீங்க குளித்துவிட்டு, மறுநாள் எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளார்.
இதையடுத்து, வயலில் துர்நாற்றம் வீசியதால், சந்தேமடைந்த மக்கள் அருகில் சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது ஸ்ரீமந்த் என்பது தெரியவந்தது. பின்னர், போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், விசாரணைக்கு பின் மனைவி சாவித்ரியை கைது செய்துள்ளனர். ஆரம்பத்தில் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்ன சாவித்ரி, பலமுறை கேட்டும் ஒரே பதிலையே சொல்லி வந்துள்ளார். இறுதியில் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது தான், “என் கணவனை போல எங்குமே யாரையும் பார்த்திருக்க முடியாது.
குடிப்பதற்கு பணம் கேட்டு தினம் தினம் தொல்லை கொடுப்பார். பணத்துக்காக என்னை பல ஆண்களுடன் உறவு கொள்ள சொன்னார். தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடிப்பார். பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய முயன்றார். என்னுடைய மகளை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான்தான் என் கணவரை கொன்றேன். ஆனால், நான் ஜெயிலுக்கு போயிட்டால், என் பிள்ளைகள் அனாதைகள் ஆகிவிடுவார்கள். என்னை விட்டு விடுங்கள்” என்று கதறி அழுதுள்ளார். ஆனால், சட்டம் தன் கடையை செய்யும் என்பதுபோல காவல்துறையினர் சாவித்ரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.