பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ரொக்கமாக ரூ.1,000 அல்லது ரூ.1,500 சேர்த்து வழங்கப்படும் என்று பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த பரிசுத்தொகுப்பில் ரொக்கம் இல்லாதது பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியது.
இந்நிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 வழங்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்புகையில், அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “கடந்த ஆண்டு தமிழகம் மிகப்பெரிய இயற்கை பேரிடரை சந்தித்துள்ளது. இந்த பேரிடருக்காக ரூ.2,028 கோடி செலவு செய்துள்ளதாகவும், பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளதாகவும் அதனால் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 சேர்க்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
Readmore: இறப்பிலும் இணைப்பிரியாத தம்பதி!. சேலத்தில் மனைவி இறந்த துக்கத்தால் கணவரும் உயிரிழந்த சோகம்!.